75-வது சுதந்திர தினம் குறித்த வாசகங்களுடன் பல வண்ண கொடிகள்


75-வது சுதந்திர தினம் குறித்த வாசகங்களுடன் பல வண்ண கொடிகள்
x

75-வது சுதந்திர தினம் குறித்த வாசகங்களுடன் பல வண்ண கொடிகள்

திருச்சி

செம்பட்டு:

மத்திய அரசின் சார்பில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை 75 நாட்கள் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டு, தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் வாகனங்களை நிறுத்துமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பங்களில் பல வண்ணங்களில் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றுள்ள கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. நாட்டின் 75-வது சுதந்திர தினம் குறித்து வெளிநாட்டு பயணிகளும் அறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பட்டொளி வீசி பறக்கும் இந்த கொடிகள், அவர்களை கவரும் வகையில் உள்ளது.


Next Story