முனியப்பசாமி கோவில் வைகாசி திருவிழா


முனியப்பசாமி கோவில் வைகாசி திருவிழா
x

நொய்யல் அருகே முனியப்பசாமி கோவில் வைகாசி திருவிழா நடைபெற்றது.

கரூர்

வைகாசி திருவிழா

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முனிநாதபுரம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற முனியப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை திரளான பக்தர்கள் சேமங்கி காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து ஊர்வலமாக சேமங்கி மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர்.அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து புனிதநீருடன் ஊர்வலமாக முனியப்ப சாமி கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நேர்த்திக்கடன்

மதியம் 3 மணிக்கு மேல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் முனியப்பசாமி கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், இரவு 7 மணிக்கு மாவிளக்கு எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு வாண வேடிக்கை நடந்தது.நேற்று கிடா வெட்டு பூஜை நடைபெற்றது. மதியம் முனியப்பசாமிக்கு அசைவ படையல் போடப்பட்டு பூஜை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story