முனியாண்டி கோவில் பொங்கல் விழா

வாசுதேவநல்லூர் முனியாண்டி கோவில் பொங்கல் விழா நடந்தது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் புதுமந்தை தெருவில் அமைந்துள்ள முனியாண்டி கோவில் ஆடி மாத பொங்கல் விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளில் தீர்த்த குடம், பால்குடம் எடுத்தல், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை, இரவு 12 மணிக்கு சாம பூஜை ஆகியன நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு முனியாண்டி கோவில் முன்பு பொங்கலிடுதல் நடைபெற்றது. நேற்று மதியம் 12 மணிக்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நாடார் உறவின் முறை நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





