வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த முதியவர் கழுத்தை அறுத்து கொலை


வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த  முதியவர் கழுத்தை அறுத்து கொலை
x

புளியங்குடி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த முதியவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த முதியவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வீட்டில் தனியாக இருந்த முதியவர்

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமம் கீழவடக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா என்ற பழைய கருப்பையா (வயது 62). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கருப்பையாவுக்கு மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

மகன், மகள்கள் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகிறார்கள். கருப்பையாவின் மனைவி தனது மகன் முத்துக்குமாருடன் இலவங்குளத்தில் வசித்து வருகிறார். இதனால் கருப்பையா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

கழுத்தை அறுத்து கொலை

நேற்று முன்தினம் இரவில் கருப்பையா வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டு இருந்தார். நேற்று அதிகாலையில் அவரது வீட்டிற்குள் மர்மநபர்கள் புகுந்தனர்.

அவர்கள் திடீரென்று தூங்கிக்கொண்டு இருந்த கருப்பையாவின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

போலீசார் விரைந்தனர்

நேற்று காலையில் கருப்பையாவின் வீட்டிற்கு சென்ற அப்பகுதி மக்கள் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வலைவீச்சு

இந்த கொடூரக்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். மேலும், கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புளியங்குடி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த முதியவர் கழுத்தை அறுத்துக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story