கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை


கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை
x

கொலை செய்யப்ட்ட நரசிம்மன் மூர்த்தி 

நாகூர் அருகே கட்டிட தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொைல செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

நாகூர் அருகே கட்டிட தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொைல செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கட்டிட தொழிலாளி

நாகை மாவட்டம், நாகூரை அடுத்த முட்டம் கீழத்தெருவில் வசித்தவர் நரசிம்மன்மூர்த்தி (வயது 42). கட்டிட தொழிலாளியான இவருக்கு மாரியம்மாள் என்கிற மனைவியும், நவீன், பாலாஜி ஆகிய 2 மகன்களும் உள்ளனர். நரசிம்மன்மூர்த்திக்கும், அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு நரசிம்மன்மூர்த்திக்கும், பரமசிவத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பரமசிவம் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை நரசிம்மன்மூர்த்தி கீழே தள்ளி உடைத்து உள்ளார்.

வெட்டிக் கொலை

இதில், ஆத்திரமடைந்த பரமசிவம் மற்றும் அவரது மனைவி பாக்கியவதி, மகன் மகாதேவன் ஆகியோர் சேர்ந்து நரசிம்மன்மூர்த்தியை அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில், நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நரசிம்மன்மூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவம் (57) மற்றும் அவரது மனைவி பாக்கியவதி, மகன் மகாதேவன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story