கட்டிட மேஸ்திரி கொலைமனைவியின் கள்ளக்காதலன் நண்பருடன் கைது


கட்டிட மேஸ்திரி கொலைமனைவியின் கள்ளக்காதலன் நண்பருடன் கைது
x

மோகனூர் அருகே கட்டிட மேஸ்திரி கொலை வழக்கில் அவரது மனைவியின் கள்ளக்காதலன், நண்பர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்

மோகனூர்

கட்டிட மேஸ்திரி கொலை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சி செல்லிபாளையம் காலனியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 37), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்கு அனிஷ், ஆகாஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 23-ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் செல்லிப்பாளையம் பகுதியில் பெரியசாமி விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மோகனூர் போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே பிரேமாவின் நடவடிக்கையை போலீசார் கண்காணித்தனர். அதாவது, கணவர் இறந்த பிறகும் பிரேமா மகிழ்ச்சியாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பிரேமாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரேமா மோகனூரில் உள்ள பேக்கரிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அங்கே வேலை பார்த்த நந்திகேசவன் (25) என்பவருடன் கடந்த 4 மாதமாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதை கண்டித்த கணவனை கொலை செய்து விட்டு கள்ளக்காதலனுடன் வாழலாம் என முடிவு செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து பிரேமாவை கைது செய்து நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மகளிர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது

இதையடுத்து தலைமறைவாக இருந்த கள்ளக்காதலனை மோகனூர் போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் மோகனூர் அடுத்த வாங்கல் பிரிவு ரோடு அருகே நின்றுகொண்டு இருந்த நந்திகேசவனையும், அவருக்கு உடந்தையாக இருந்த பேக்கரியில் வேலை செய்த அவரது நண்பர் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுகா, குன்னத்தூர் பகுதியை சேர்ந்த தனுஷ் (21) ஆகிய 2 பேரை கைது செய்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் விசாரணை நடத்தி வருகின்றார்.

1 More update

Next Story