சீர்வரிசைத்தட்டுகளுடன் வந்த இஸ்லாமியர்கள்


சீர்வரிசைத்தட்டுகளுடன் வந்த இஸ்லாமியர்கள்
x

உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு சீர்வரிசைத்தட்டுகளுடன் வந்த இஸ்லாமியர்களால் மதங்களை கடந்த மனித நேயம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்

உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு சீர்வரிசைத்தட்டுகளுடன் வந்த இஸ்லாமியர்களால் மதங்களை கடந்த மனித நேயம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சீர்வரிசை

மதங்களின் பெயரால் பல கலவரங்கள், பல போராட்டங்கள் நடந்து வரும் இன்றைய சூழலில் தொப்புள் கொடி உறவுகளாக வாழ்ந்து உடுமலை மக்கள் வியக்க வைக்கிறார்கள். ஆண்டுதோறும் நடைபெறும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை அனைத்து மதத்தினரும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.

குறிப்பாக தேர்த்திருவிழாவன்று தேரோடும் வீதிகளில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் நின்று தேருக்கு வரவேற்பளிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

தற்போது தேர்த்திருவிழா நிகழ்வுகள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இஸ்லாமியர்கள் ஊர்வலமாக வந்து மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கிய நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரம்ஜான் வாழ்த்து

உடுமலை பூர்வீக பள்ளி ஜமாத்தை சார்ந்த இஸ்லாமியர்கள் நேற்று உடுமலை நகர்மன்றத் தலைவர் மத்தீன் தலைமையில் அம்மனுக்கு சாத்த பட்டுசேலை மற்றும் பழங்கள் கொண்ட சீர் வரிசை தட்டுகளுடன் கோவிலுக்கு வந்தனர்.

அவர்களை கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ், ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். மேலும் அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சீர்வரிசைத் தட்டுக்களை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கிய இஸ்லாமியர்கள் தேர்த்திருவிழா சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர். மதங்களைக் கடந்து மனித நேயத்துடன் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்தது.

பல இடங்களில் மத மோதல்கள் நடந்து வரும் நிலையில் மதங்களை விட மனிதமே பெரிது என வாழும் உடுமலை மக்கள் உதாரணமாக வாழ்வது இந்த நிகழ்வால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story