கூலித்தொழிலாளி மர்மசாவு


கூலித்தொழிலாளி மர்மசாவு
x
தினத்தந்தி 12 April 2023 6:45 PM GMT (Updated: 13 April 2023 7:32 AM GMT)

தடங்கத்தில் கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தர்மபுரி

நல்லம்பள்ளி

நல்லம்பள்ளி அருகே உள்ள தடங்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகையன் (வயது 58). கூலி தொழிலாளி. இவர் அங்குள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் மர்மமான முறையில் முருகையன் இறந்து கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முருகையனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முருகையன் மர்மசாவு குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story