லாரி டிரைவர் மர்மசாவு


லாரி டிரைவர் மர்மசாவு
x
தினத்தந்தி 12 April 2023 6:53 PM GMT (Updated: 13 April 2023 10:01 AM GMT)

எருமப்பட்டியில் லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்

எருமப்பட்டி

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா அழகாபுரி சாலக்காடு பகுதியை சேர்ந்தவர் சித்தன் மகன் மோகன் (வயது 34). லாரி டிரைவர். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மோகன் தலையில் படுகாயம் ஏற்பட்ட நிலையில் பவித்திரம் புதூர் பெத்து ரெட்டியார் தோட்டம் அருகே கிடந்து உள்ளார். இதை பார்த்த அந்தபகுதி பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை யாராவது தாக்கி இறந்தாரா? அல்லது மர்மமான முறையில் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story