திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி மர்ம சாவு


திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி மர்ம சாவு
x

திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்தார்.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

பிணமாக தொங்கினார்

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மழவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 30). இவரது மனைவி பவானி(23). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. மேலும் தற்போது பவானி 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜா, அவரது தாய், தந்தை ஆகியோர் உறவினரின் காதணி விழாவிற்கு நகை வாங்குவதற்காக அரியலூருக்கு சென்று விட்டனர். இதனால் பவானி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். ராஜா மற்றும் அவரது பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, படுக்கை அறையில் இருந்த ஒரு கம்பியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்ட நிலையில் பவானி பிணமாக தொங்கியதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விக்கிரமங்கலம் போலீசார், பவானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பவானி செங்கராயன்கட்டளையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று தனது கணவர் ராஜாவிடம் கூறியதாகவும், அதற்கு அவர் செல்லலாம் என்று கூறியதாகவும், தெரியவந்தது.

மேலும் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பவானியின் தந்தை சேகர் அளித்த புகாரின்பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, பவானி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகி 3 மாதங்களே ஆவதால், இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story