மாயமான வீட்டு பத்திரம் - 90 வயது முதியவருக்கு உதவிய போலீஸ் கமிஷனர்


மாயமான வீட்டு பத்திரம் - 90 வயது முதியவருக்கு உதவிய போலீஸ் கமிஷனர்
x

90 வயது முதியவரின் வீட்டு பத்திரம் மாயமானதால் புதிய பத்திரம் கிடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உதவினார்.

சென்னை

சென்னை,

சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியை சேர்ந்தவர் ராஜகோபாலன் (வயது 90). இவர், திருவான்மியூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 708 சதுரடியில் வீடு வாங்கி இருந்தார். இதற்கான பத்திரப்பதிவு 1995-ம் ஆண்டு நவம்பர் 20-ந்தேதி திருவான்மியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில் அவர் தனது வீட்டின் கிரையப்பத்திரம் கடந்த மாதம் 17-ந்தேதி அன்று திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் தொலைந்து போய்விட்டதாக திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கவனத்துக்கும் வந்தது.

இதையடுத்து அவர், முதியவர் ராஜகோபாலனுக்கு அழைக்கழிப்பு இல்லாமல் பத்திரம் கிடைக்க உரிய ஏற்பாடு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் தேடியும் பத்திரம் கிடைக்கவில்லை. இவ்வாறு கண்டறிய முடியாத சான்றிதழ் என்று பட்டியலிட்டால் புதிய பத்திரம் பெறுவதற்கு சட்டத்தில் வழி உண்டு. எனவே இந்த விதியை பின்பற்றி முதியவர் ராஜகோபாலனுக்கு புதிய பத்திரம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்தனர்.

அதன்படி அவருக்கு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. தள்ளாத வயதில் தனக்கு உறுதுணையாக இருந்து உதவியாக போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் திருவான்மியூர் போலீசாருக்கு ராஜகோபாலன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.


Next Story