மாயமான மாணவன் காவிரி ஆற்றில் பிணமாக மீட்பு


மாயமான மாணவன் காவிரி ஆற்றில் பிணமாக மீட்பு
x

மாயமான மாணவன் காவிரி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டது.

திருச்சி

திருவெறும்பூர்:

மாயம்

திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்த மணிவண்ணன்-ரேவதி தம்பதியின் மகன் சரவணன்(வயது 11). இவன் ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த 4-ந் தேதி சர்க்கார்பாளையத்தில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவை காண சென்ற சரவணன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் சரவணனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மணிவண்ணன் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வந்தனர்.

கரை ஒதுங்கிய உடல்

இந்நிலையில் நேற்று காலை சரவணனின் உடல் கீழ முல்லக்குடி காவிரி ஆற்றில் கரை ஒதுங்கி உள்ளதாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சிறுவன் காணாமல் போன வழக்கை தற்போது சந்தேக மரண வழக்காக மாற்றி, இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story