நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில்மதுபாட்டில்கள் வீச்சு


நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில்மதுபாட்டில்கள் வீச்சு
x

நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில்கள் வீச்சு

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில்கள் வீசப்பட்டன. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சித்தமல்லி கடைத்தெருவில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச்செயலாளர் அலாவுதீன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பேசுகையில் தி.மு.க. குறித்து விமர்சனம் செய்தார்.

மதுபாட்டில் வீச்சு

அப்போது அங்கு வந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பொதுக்கூட்ட மேடையை நோக்கி காலி மதுபாட்டில்களை வீசினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இ்ந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்றப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த பெருகவாழ்ந்தான் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மதுபாட்டில்களை வீசிவிட்டு தப்பி ஓடியவர்களில் 2 பேரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

போலீஸ் குவிப்பு

பிரச்சினை காரணமாக பரபரப்பு ஏற்பட்டதால் கூட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. இதையடுத்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் கூட்டம் தொடர்ந்து நடந்தது.


Related Tags :
Next Story