நல்லம்பள்ளி அருகே ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


நல்லம்பள்ளி அருகே  ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x

நல்லம்பள்ளி அருகே ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே கோணங்கிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட அரிச்சந்திரனூர் கிராமத்தில் ஸ்ரீ ஊர் மாரியம்மன், செல்வவிநாயகர் மற்றும் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்து திருப்பணிகள் நடந்தது. இதையடுத்து கடந்த 29-ந் தேதி பக்தர்களுக்கு கங்கனம் கட்டி கொடியேற்றுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தீர்த்தகுடம், முளைப்பாரி அழைத்தல், கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை, யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், வழிபாடு நடைபெற்றது. பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை, யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க, தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஊர் மாரியம்மன், செல்வவிநாயகர் மற்றும் பாலமுருகன் கோவில் கோபுர கலசங்கள், மூலவர்களுக்கு அர்ச்சகர்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார சேவை, மகா தீபாராதனை நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story