'நான் முதல்வன்' திட்ட இலவச பயிற்சி வகுப்பு; கலெக்டர் தொடங்கி வைத்தார்


நான் முதல்வன் திட்ட இலவச பயிற்சி வகுப்பு; கலெக்டர் தொடங்கி வைத்தார்
x

செங்கோட்டை அரசு நூலகத்தில் ‘நான் முதல்வன்’ திட்ட இலவச பயிற்சி வகுப்பை கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை முழு நேர அரசு பொது நூலக கட்டிடத்தில் 'நான் முதல்வன்' திட்டம் வாயிலாக சுமார் 150 மாணவர்களுக்கு மத்திய தேர்வாணயம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற செயலாளா் மயிலேறும்பெருமாள், பயிற்சி அலுவலா் சதாசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரம்யா வரவேற்றார். இதைத்தொடா்ந்து மாவட்ட கலெக்டர் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நூலக வாசகர் வட்ட செயலாளா் செண்பகக்குற்றாலம், நூலகர் ராமசாமி, நூலக அரசுத் தேர்வு பொறுப்பாளா் விழுதுகள் சேகர் உள்பட பலா் கலந்து கொண்டனா். பயிற்சி வகுப்பில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனா். வாசகர் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் பா.சுதாகர் நன்றி கூறினார்.


Next Story