போதை மாத்திரைகளுடன் 4 பேர் சிக்கினர்


போதை மாத்திரைகளுடன் 4 பேர் சிக்கினர்
x

போதை மாத்திரைகளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மதுரை தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஜம்புரோபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஸ்குமார் (வயது 23), ஜம்புரோபுரம் சுபாஷ் சரவணன் (21), தத்தனேரி மணிகண்டன் (25), மகாராஜன் (23) ஆகியோர் 43 பாக்கெட்டுகளில் 215 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 40 போதை மாத்திரைகள், 6 சிரெஞ் ஆகியவை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story