நரிக்குடி யூனியன் தலைவர் நீக்கம்


நரிக்குடி யூனியன் தலைவர் நீக்கம்
x

நரிக்குடி யூனியன் தலைவர் நீக்கம் செய்யப்பட்டார்.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருந்தவர், பஞ்சவர்ணம். இவர் மீது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மொத்தம் உள்ள 14 கவுன்சிலர்களில் 12 பேர் ஆதரவு அளித்தனர்.

அதன்பேரில் கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. இதுகுறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

அதன் அடிப்படையில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்ட அறிவிப்பில், நரிக்குடி பஞ்சாயத்து யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் பஞ்சாயத்துராஜ் சட்டம் 212-வது பிரிவின்படி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.



Next Story