ஆற்றில் தவறி விழுந்து நாதஸ்வர கலைஞர் சாவு


ஆற்றில் தவறி விழுந்து நாதஸ்வர கலைஞர் சாவு
x
தினத்தந்தி 26 Aug 2023 1:59 AM IST (Updated: 26 Aug 2023 12:59 PM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே ஆற்றில் தவறி விழுந்து நாதஸ்வர கலைஞர் இறந்தார்.

தென்காசி

தென்காசி அருகே ஆய்க்குடியை அடுத்த கள்ளம்புளி காலனி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சின்னராசு (வயது 28). நாதஸ்வர கலைஞர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் மோட்டார் சைக்கிளில் சிவராம பேட்டையில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி பாலம் கட்டும் பணி நடைபெறும் அனுமன் நதி சுவரில் மோதி ஆற்றில் விழுந்து பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தலைமையில் வீரர்கள் அங்கு வந்து அவரது உடலை வெளியே எடுத்தனர். இதுகுறித்து ஆய்க்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Related Tags :
Next Story