சாதனை படைத்த குழந்தைகளுக்கான தேசிய விருது


சாதனை படைத்த குழந்தைகளுக்கான தேசிய விருது
x
தினத்தந்தி 24 Aug 2023 6:45 PM GMT (Updated: 24 Aug 2023 6:47 PM GMT)

சிறந்த சாதனை புரிந்த குழந்தைகளை தேசிய அளவில் கவுரவப்படுத்தும் விதமாக 2024-ம் ஆண்டிற்கான பிரதம மந்திரி ராஷ்ட்ரீய பால புரஸ்கார் விருது பெற வருகிற 31-ந்தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர்

விருதுநகர்

சிறந்த சாதனை புரிந்த குழந்தைகளை தேசிய அளவில் கவுரவப்படுத்தும் விதமாக 2024-ம் ஆண்டிற்கான பிரதம மந்திரி ராஷ்ட்ரீய பால புரஸ்கார் விருது பெற வருகிற 31-ந்தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:-

18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் வீர தீர செயல்கள், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் கலை மற்றும் பண்பாடு,புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் சிறந்த சாதனை புரிந்த குழந்தைகளை தேசிய அளவில் கவுரவப்படுத்தும் விதமாக 2024 -ம் ஆண்டிற்கான பிரதம மந்திரி ராஷ்ட்ரீய பால புரஸ்கார் விருது இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்பட உள்ளது.

இந்த விருது வீரதீரமாக செயல்படும் குழந்தைகளுக்கான விருது மற்றும் சிறந்த குழந்தைகளுக்கான விருது என இரண்டு பிரிவுகளாக வழங்கப்பட உள்ளது எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த விருது பெற விரும்பும் குழந்தைகள் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். இந்தியாவில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விருதிற்கு விண்ணப்பிக்க கடைசி நாளான 31-ந் தேதியன்று 18 வயதுக்குள் இருக்க வேண்டும். எனவே இந்த விருதுக்கான சிறந்த செயல் மற்றும் சாதனை செய்தவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story