அவினாசியில் தேசிய ஆடை கண்காட்சி - பின்னலாடை ரகங்களுக்கு பொதுமக்களிடையே வரவேற்பு


அவினாசியில் தேசிய ஆடை கண்காட்சி - பின்னலாடை ரகங்களுக்கு பொதுமக்களிடையே வரவேற்பு
x

தேசிய ஆடை கண்காட்சியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பின்னலாடை ரகங்கள், பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

திருப்பூர்,

உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தயாரிக்கப்படும் பின்னலாடை ரகங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் நடைபெற்று வரும் தேசிய ஆடை கண்காட்சியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பின்னலாடை ரகங்கள், பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆடை ரகங்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த ஆடைகள் முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால், ஒருபுறம் விவசாயிகள் பயன்பெறுவதோடு கைத்தறி நெசவாளர்களும் பயனடைந்து வருவதாக அதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்


Next Story