தேசிய மக்கள் நீதிமன்றம்; வருகிற 12-ந்தேதி நடக்கிறது


தேசிய மக்கள் நீதிமன்றம்; வருகிற 12-ந்தேதி நடக்கிறது
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

திருவண்ணாமலை

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் நடைபெற உள்ளது.

நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் உறுப்பினர்கள் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடைபெற உள்ளது. சாலை விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு, மின்சார பயன்பாடு, வீட்டு வரி, குடிநீர் வரி, ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நலன், இழப்பீடு வழக்குகள், கல்வி கடன், வங்கி கடன் சம்பந்தமான வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

வழக்காடிகள் நேரடியாக பங்கேற்று சமாதானமாகவும், விரைவாகவும் முடித்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இழப்பீட்டு தொகை, பிற பிரச்சினைகளை இருதரப்பினர் சம்மதத்துடன் விரைவில தீர்க்கவும் மக்கள் நீதிமன்றங்கள் வழியாக செய்கிறது.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான எம்.கே.ஜமுனா தெரிவித்து உள்ளார்.


Next Story