நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா


நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா
x

சயனபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது.

ராணிப்பேட்டை

நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட சயனபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு கலந்துகொண்டு நாட்டு நலப்பணித் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி, மாணவர்கள் சமூக நலனில் அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

மேலும் நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் கலந்து கொண்டு சேவையாற்றிய மாணவ, மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் வேதையா, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story