ஆண்டிப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு


ஆண்டிப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு
x
தினத்தந்தி 30 Jun 2023 6:45 PM GMT (Updated: 2 July 2023 11:21 AM GMT)

ஆண்டிப்பட்டி அருகே தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.

தேனி

கிணற்றில் பிணம்

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 40). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த மாதம் 27-ந்தேதி மாலை குமார், அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் மொச்சை பயிறுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு வருவதாக வீட்டில் இருந்து சென்றார்.

அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் குமாரின் தோட்டத்து கிணற்றில் வழியாக பொதுமக்கள் சென்றனர். அப்போது அந்த கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார்.

விவசாயி சாவு

இதைக்கண்ட பொதுமக்கள் ராஜதானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் மாயமான குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச வந்தபோது கிணற்றில் தவறி விழுந்து குமார் இறந்தது தெரியவந்தது.


Next Story