ஆப்பக்கூடல் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை


ஆப்பக்கூடல் அருகே  கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
x

பெண் தற்கொலை

ஈரோடு

அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் ஒரிச்சேரி புதூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன். அவருடைய மனைவி சாந்தி (வயது 50). இவர் கடந்த 15 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு் வந்துள்ளார். மேலும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று காலை 9 மணி அளவில் வீடு அருகே உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் குதித்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு் சிகிச்சைக்காக ஆப்பக்கூடலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சாந்தி இறந்்தார்.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story