அறச்சலூர் அருகே விபத்தில் எல்.ஐ.சி. முகவர் பலி


அறச்சலூர் அருகே விபத்தில் எல்.ஐ.சி. முகவர் பலி
x

அறச்சலூர் அருகே விபத்தில் எல்.ஐ.சி. முகவர் பலியானாா்.

ஈரோடு

அறச்சலூர்

அறச்சலூர் லிங்காத்தா கோட்டை அருகே உள்ள பச்சாகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி(வயது 63). எல்.ஐ.சி. முகவர். இவர் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனமும், மொபட்டும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அறச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story