சன்னதுபுதுக்குடி அருகேகார் மோதி மூதாட்டி பலி


சன்னதுபுதுக்குடி அருகேகார் மோதி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 4 Aug 2023 6:45 PM GMT (Updated: 4 Aug 2023 6:46 PM GMT)

சன்னதுபுதுக்குடி அருகே கார் மோதி மூதாட்டி பலியானார்.

தூத்துக்குடி

கயத்தாறு:

சன்னதுபுதுக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி அம்மா பொண்ணு (வயது 60). இவர் கயத்தாறு சந்தைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு பஸ்சில் திரும்பி வந்துள்ளார். சன்னதுபுதுக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர், வீட்டிற்கு நடந்து ெசன்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சாத்தூரில் இருந்து நெல்லைக்கு சென்ற கார் மோதியதில் அம்மாபொன்னு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன அம்மா பொண்ணுக்கு செல்லத்துரை என்ற மகனும், ராஜம்மாள் என்ற ஒரு மகளும் உள்ளனர்.


Next Story