சின்னமனூர் அருகே பள்ளி மாணவன் தற்கொலை


சின்னமனூர் அருகே  பள்ளி மாணவன் தற்கொலை
x
தினத்தந்தி 11 Nov 2022 6:45 PM GMT (Updated: 11 Nov 2022 6:47 PM GMT)

சின்னமனூர் அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்

தேனி

சின்னமனூர் அருகே உள்ள கரிச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் வசந்த் (வயது 14). எரசக்கநாயக்கனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது வசந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story