தேவதானப்பட்டி அருகேகல்லூரி மாணவியிடம் தகராறு :வாலிபர் கைது


தேவதானப்பட்டி அருகேகல்லூரி மாணவியிடம் தகராறு :வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 24 April 2023 6:47 PM GMT)

தேவதானப்பட்டி அருேக கல்லூரி மாணவியிடம் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி தெற்கு காலனியை சேர்ந்தவர் சரவண செல்வன் (வயது 26). இவரும், 22 வயதான கல்லூரி மாணவி ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சரவண செல்வனின் நடவடிக்ைக பிடிக்காததால் அந்த மாணவி அவரிடம் பழகுவதை நிறுத்தி விட்டார். இதனால் அந்த மாணவி மீது சரவண செல்வன் கோபத்தில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மாணவியின் வீட்டின் முன்பு நின்று தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதை தட்டி கேட்ட அந்த மாணவியின் கையை பிடித்து இழுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இகுறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவண செல்வனை கைது செய்தனர்.


Related Tags :
Next Story