தேவதானப்பட்டி அருகே வீட்டில் பிணமாக கிடந்த பெண்


தேவதானப்பட்டி அருகே  வீட்டில் பிணமாக கிடந்த பெண்
x

தேவதானப்பட்டி அருகே வீட்டில் பெண் பிணமாக கிடந்தார்.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள ராஜஸ்ரீ நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 59). இவர் தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார். நேற்று வீட்டில் உள்ள அனைவரும் வெளியே சென்று விட்டனர். ஜெயலட்சுமி மட்டும் தனியாக இருந்தார். பின்னர் உறவினர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டில் உள்ள கட்டிலில் தீயில் எரிந்து கருகிய நிலையில் ஜெயலட்சுமி பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவர்கள் ஜெயமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாா் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உறவினா்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story