தேவதானப்பட்டி அருகேபெண்ணை தாக்கிய மகன் கைது

தேவதானப்பட்டி அருகே உள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் பெருமாயி (வயது 65). இவரது மகன் மாயாண்டி (37). இவர், தனது தாயிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மாயாண்டி தனது தாயிடம் பணம் கேட்டார். அப்போது பெருமாயி பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த மாயாண்டி, பெருமாயியை தாக்கினார். இதுகுறித்து பெருமாயி தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயாண்டியை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





