கயத்தாறு அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி


தினத்தந்தி 14 Aug 2023 6:45 PM GMT (Updated: 14 Aug 2023 6:45 PM GMT)

கயத்தாறு அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலியானார்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

விவசாயி

கயத்தாறு அருகே உள்ள செட்டிகுறிச்சி பஞ்சாயத்தை சேர்ந்த தெற்கு கோனார்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்த சிவனையன் மகன் மூக்கையா (வயது 50). விவசாயி. இவர் நேற்று காலையில் ஓலைகுளம் கிராமத்தில் சின்னப்பாண்டி என்பவர் தோட்டத்தில் பாத்தி கட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். நேரம் செல்லச்செல்ல வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அவருக்கு சற்று தலைச்சுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கிணற்றில் விழுந்து சாவு

இதனால் தோட்டத்திலுள்ள கிணற்றின் அருகில் இழைப்பாறுவதற்காக அவர் நின்றுள்ளார். அப்போது தலைச்சுற்றல் அதிகமாகியதால் நிலை தடுமாறிய அவர் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களால் அவரை மீட்க முடியவில்லை.

இதுகுறித்து அவர்கள் கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் அவர் கிணற்று தண்ணீரில் மூழ்கி இறந்து போனார்.

போலீசார் விசாரணை

போலீசார் கிணற்றுக்குள் இருந்து அவரது உடலை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன மூக்கையாவுக்கு சன்முகத்தாய் என்ற மனைவியும், கருப்பசாமி, சங்கிலிபாண்டி, சிவா, மாரிச்செல்வம் ஆகிய நான்கு 4 மகன்களும், கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனர்.


Next Story