கருவேப்பிலங்குறிச்சி அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


கருவேப்பிலங்குறிச்சி அருகே  காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x

கருவேப்பிலங்குறிச்சி அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூர்

கருவேப்பிலங்குறிச்சி,

கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சாத்துக்கூடல் கீழ்பாதி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மின் மோட்டார் பழுதடைந்தது. இதனை சீரமைக்காததால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மின்மோட்டாரை சீரமைக்கக்கோரி அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மாலை சாத்துக்கூடல் பெண்ணாடம் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பும் ஏற்பட்டது.


Next Story