குமராட்சி அருகேமின்கம்பி அறுந்து விழுந்து பெண் சாவு


குமராட்சி அருகேமின்கம்பி அறுந்து விழுந்து பெண் சாவு
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:19 PM IST)
t-max-icont-min-icon

குமராட்சி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து பெண் உயிாிழந்தாா்.

கடலூர்

குமராட்சி,

குமராட்சி அருகே கருப்பூர் கிராமத்தில் உள்ள வயலில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். மேலும் அவருடைய உடலுக்கு அருகில் அழுகிய நிலையில் ஆடு ஒன்றும் செத்த நிலையில் கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்போில் குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பெண்ணின் உடலை பாா்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கருப்பூர் நடுத்தெருவை சேர்ந்த செல்வமணி மனைவி சரோஜா(வயது 55) என்பது தெரியவந்தது. மேலும் ஆட்டை மேய்ச்சலுக்காக ஓட்டிவந்தபோது, மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கியதில் சரோஜா மற்றும் ஆடு இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சரோஜாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story