மேலூர் அருகே கிரானைட் குவாரிகளை அனுமதிக்க கூடாது -கலெக்டரிடம் கிராம மக்கள் மனு


மேலூர் அருகே கிரானைட் குவாரிகளை அனுமதிக்க கூடாது -கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
x

மேலூர் அருகே கிரானைட் குவாரிகளை அனுமதிக்க கூடாது என கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

மதுரை


மனு அளித்தனர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டி, அய்யாபட்டி ஊராட்சிகளை சேர்ந்த சக்கிடிபட்டி, ஓட்டகோவில்பட்டி, சேக்கிபட்டி கிராமங்களை சேர்ந்த மக்கள் கிரானைட் குவாரி அமைக்க கூடாது என கூறி கலெக்டரை சந்தித்து நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில், மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேக்கிபட்டி கிராமம், அய்யாபட்டி மற்றும் திருச்சுனை ஆகிய அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள பல வண்ண கிரானைட் குவாரிகளை 20 ஆண்டுகளுக்கு குத்தகை உரிமம் வழங்க டெண்டருடன் இணைந்த பொது ஏலத்திற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கிரானைட் குவாரிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு அரசு பள்ளிகள், மருத்துவமனைகள், கோவில்கள் சேதமடையும் நிலையும் உள்ளது.

விவசாயம் பாதிக்கும்

எனவே, கிரானைட் குவாரிகளை அனுமதிக்க கூடாது. கிரானைட் குவாரிகளால் விவசாயம் முடங்கிவிடும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Next Story