முத்தையாபுரம் அருகேஅரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


முத்தையாபுரம் அருகேஅரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 20 Sep 2023 6:45 PM GMT (Updated: 20 Sep 2023 6:45 PM GMT)

முத்தையாபுரம் அருகே அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே எம். தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மழை வெள்ள தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தெர்மல் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜெகதீஷ் முன்னிலையில், ,தீயணைப்பு வீரர்களால் மழை வெள்ள காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வுக்காக ஒத்திகை பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் நடத்தி காண்பிக்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியைகள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


Next Story