நெல்லிக்குப்பம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு


நெல்லிக்குப்பம் அருகே  பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 10 Nov 2022 6:45 PM GMT (Updated: 10 Nov 2022 6:45 PM GMT)

நெல்லிக்குப்பம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தது தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் ரஞ்சினி(வயது 25). சம்பவத்தன்று இவர் கடையில் இருந்தபோது, மர்மநபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். திடீரென அவர்கள் கடைக்குள் புகுந்து ரஞ்சினி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story