நெல்லிக்குப்பம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

நெல்லிக்குப்பம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தது தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் ரஞ்சினி(வயது 25). சம்பவத்தன்று இவர் கடையில் இருந்தபோது, மர்மநபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். திடீரென அவர்கள் கடைக்குள் புகுந்து ரஞ்சினி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





