பெரியகுளம் அருகேகல்லூரி மாணவியிடம் தகராறு; வாலிபர் மீது வழக்கு


பெரியகுளம் அருகேகல்லூரி மாணவியிடம் தகராறு; வாலிபர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 Dec 2022 6:45 PM GMT (Updated: 30 Dec 2022 6:46 PM GMT)

பெரியகுளம் அருகே கல்லூரி மாணவியிடம் தகராறு செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

பெரியகுளம் அருகே உள்ள அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர் மருதுபாண்டியன் (வயது 22). இவர், 18 வயது மாணவி ஒருவரை தினந்தோறும் கல்லூரிக்கு செல்லும் போது பின்தொடர்ந்து சென்றார். அப்ேபாது அவர் அந்த மாணவிக்கு தொல்லை கொடுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி தனது தாயிடம் கூறினார். அவர் மருதுபாண்டியனை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அந்்த மாணவியின் தாயை தாக்கியதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெரியகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் மருதுபாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story