புஞ்சைபுளியம்பட்டி அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி


புஞ்சைபுளியம்பட்டி அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி
x

புஞ்சைபுளியம்பட்டி அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலியானாா்.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

கோவை மாவட்டம் காந்திபுரம் ராம்நகரை சேர்ந்தவர் தாஜ்தீன். இவருடைய மகன் முபாரக் அலி (வயது 18). சித்தப்பா சாகுல் ஹமீது குடும்பத்தினருடன் முபாரக் அலி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையை சுற்றிப்பார்க்க காரில் வந்தார். அதன்பின்னர் நேற்று முன்தினம் மாலை அனைவரும் செண்பகப்புதூர் வாய்க்காலில் குளிக்க சென்றனர். அப்போது முபாரக் அலி வாய்க்காலின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீாில் அடித்து செல்லப்பட்டார். சாகுல் ஹமீதும், அவருடன் வந்தவர்களும் பதறி அடித்து முபாரக் அலியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதற்குள் இருள் சூழ்ந்துவிட்டதால் நேற்று காலை மீண்டும் முபாரக் அலியை வாய்க்காலில் தேடினார்கள். அப்போது அவர் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முபாரக் அலியின் உடலை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.


Related Tags :
Next Story