ராஜாக்கமங்கலம் அருகே விஷம் குடித்து தம்பதி தற்கொலை


ராஜாக்கமங்கலம் அருகே  விஷம் குடித்து தம்பதி தற்கொலை
x

ராஜாக்கமங்கலம் அருகே விஷம் குடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே விஷம் குடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கணவன், மனைவி

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள தம்மத்துகோணம் சத்ரபதி சிவாஜி தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 54), தொழிலாளி. இவருடைய மனைவி புவனேஸ்வரி என்ற லதா (47). இந்த தம்பதிக்கு அருள்ஜோதி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மகளுக்கு திருமணம் ஆன நிலையில் இவர்கள் மகனுடன் வசித்து வந்தனர். இதற்கிடையே செல்வக்குமார் உடல் நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டதாக தெரிகிறது. இதனால் செல்வக்குமாரும், புவனேஸ்வரியும் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் சாப்பிட்ட பிறகு தங்களுடைய அறைக்கு தூங்க சென்றனர்.

தற்கொலை

நேற்று காலையில் வெகுநேரமாகியும் செல்வக்குமார், புவனேஸ்வரி அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மகன் அருள்ஜோதி உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு தந்தையும், தாயும் அசைவற்ற நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கதறி அழுதார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேருடைய உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து அருள்ஜோதி அளித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story