ராமநத்தம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை


ராமநத்தம் அருகே  விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 30 Sep 2022 6:45 PM GMT (Updated: 30 Sep 2022 6:45 PM GMT)

ராமநத்தம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூர்

ராமநத்தம்,

ராமநத்தம் அடுத்த வாகையூரை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை (வயது 77). விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தொழுதூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிச்சை பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சை பிள்ளை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story