ராமநத்தம் அருகே பச்சையம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்


ராமநத்தம் அருகே  பச்சையம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா  திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
x

ராமநத்தம் அருகே பச்சையம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கடலூர்

ராமநத்தம்,

ராமநத்தம் அடுத்த வெங்கனூரில் பச்சையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இதையடுத்து இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 2-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் தீ மிதி திருவிழா நேற்று நடைபெற்றது.

தேரோட்டம்

இதையொட்டி பச்சையம்மனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் பச்சையம்மன் எழுந்தருளினார். இதையடுத்து தேரோட்டம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் விரதமிருந்த திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து தேரானது கோவில் வளாகத்தை சுற்றி நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


Next Story