சத்தியமங்கலம் அருகேலாரி மோதி தொழிலாளி சாவு


சத்தியமங்கலம் அருகேலாரி மோதி தொழிலாளி சாவு
x

சத்தியமங்கலம் அருகே லாரி மோதி தொழிலாளி இறந்தாா்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 65). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் மகன் ரங்கன் வீட்டில் குடியிருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பளம் வாங்க சென்ற கிருஷ்ணன் நேற்று மதியம் கோட்டுவீராம்பாளையத்தில் இருந்து நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தனியார் திருமண மண்டபம் அருகே திப்பு சுல்தான் ரோட்டில் சென்றபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் மீது மோதியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு வரும் வழியிலேயே கிருஷ்ணன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story