தாளவாடி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி


தாளவாடி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
x

தாளவாடி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானாா்.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே உள்ள பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது50) கூலித் தொழிலாளி. அவருடைய மகள் ஜோதி (26). இவருக்கும் கர்நாடக மாநிலம் சிக்கமங்களூர் மாவட்டம் எம்சள்ளி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் (33) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரக்சனா (4) என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து ஜோதி பாளையம் கிராமத்தில் கடந்த 8 மாதங்களாக வசித்து வந்தார். நேற்று மதியம் அவர் வீட்டில் துணியை துவைத்து அங்குள்ள கம்பியில் காய போட்டுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே அறுந்து கிடந்த மின்ஒயர் கம்பி மீது கிடந்ததால் அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு் அங்கு சென்ற உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு ஜோதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story