திருமங்கலம் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி


திருமங்கலம் அருகே  வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
x

திருமங்கலம் அருகே வெவ்வேறு விபத்துக்களில் 2 பேர் பலியாகினர்.

மதுரை

திருமங்கலம்,


விபத்து

திருமங்கலம் நான்கு வழி சாலை அணுகு சாலையில் தருமத்துப்பட்டி பிரிவு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த நபரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மறவன்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொழிலாளி பலி

இதேபோல் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன் (47). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மதுரையில் இருந்து திருமங்கலம் நான்கு வழிச்சாலை வழியாக மேலக்கோட்டை குடியிருப்பு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இவருடைய மனைவி ராமுத்தாய் கொடுத்த புகாரின் ஊரில் திருமங்கலம் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story