திருப்பரங்குன்றம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு


திருப்பரங்குன்றம் அருகே  கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு
x

திருப்பரங்குன்றம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தார்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி பஞ்சவர்ணம் (வயது 62). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே ஆடுகள் மேய்த்து கொண்டிருந்தார். மாலையில் மேய்ச்சல் முடிந்து வீட்டுக்கு ஆடுகளை அழைத்து செல்ல தயாரானார். இந்த நிலையில் ஒரு ஆடு அங்கும், இங்குமாக ஓடியதாக தெரிகிறது. அதனால் அந்த ஆட்டுக்குட்டியை பிடிக்க பஞ்சவர்ணம் முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராமல் பஞ்சவர்ணம் அங்குள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடினார். அதை யாரும்பார்க்கவில்லை என்று தெரிகிறது.

இதே சமயம் நீண்ட நேரம் ஆகியும் பஞ்சவர்ணம் வீட்டுக்கு வராததால் அவரது உறவினர்கள் பஞ்சவர்ணத்தை தேடி ஆடுகள் மேய்ந்த இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் பஞ்சவர்ணம் பிணமாக மிதந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி பஞ்சவர்ணத்தின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story