வீரபாண்டி அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி விவசாயி சாவு


வீரபாண்டி அருகே  முல்லைப்பெரியாற்றில் மூழ்கி விவசாயி சாவு
x

வீரபாண்டி அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்

தேனி

சின்னமனூர் காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் மணி (வயது 75). விவசாயி. கடந்த 17-ந் தேதி இவர், சின்னமனூர்-மார்க்கையன் கோட்டை இடையே உள்ள முல்லைப் பெரியாற்றில் குளிக்க சென்றார். அப்போது தண்ணீர் அதிகமாக சென்றதால் அவர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஆற்றில் இறங்கி அவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை வீரபாண்டி அருகே கூழையனூர் ஆற்றில் ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மணி என்பதும், முல்லைப்பெரியாற்றில் மூழ்கி இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அவரது மகன் பாலு கொடுத்த புகாரின்பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story