15 பள்ளிகளில் 'நீட்' தேர்வுக்கான பயிற்சி வகுப்பு


15 பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு
x

15 பள்ளிகளில் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி வகுப்பு

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, 15 பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

நீட் தேர்வு பயிற்சி

திருப்பூர் மாவட்டத்தில் அரசு, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 2022-23-ம் ஆண்டு நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நாளை (சனிக்கிழமை) 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 15 பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளது.

அதன்படி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, அவினாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் என்.சி.பி. நகரவை மேல்நிலைப்பள்ளி, மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொங்கலூர் பி.வி.கே.என்.மேல்நிலைப்பள்ளி, உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது.

சனிக்கிழமைதோறும் பயிற்சி

2022-23-ம் கல்வியாண்டில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பயிற்சி நடைபெற உள்ளது. ஒவ்வொரு பள்ளியில் 11-ம் வகுப்பில் 20 பேரும், 12-ம் வகுப்பில் 50 பேரும் இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நீட் பயிற்சிக்கான ஆசிரியர்களுக்கான ஆயத்தக்கூட்டம் நேற்று ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். தொடர்பு தலைமை ஆசிரியர்கள், தொடர்பு ஒருங்கிணைப்பாளர்கள், போட்டித்தேர்வு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டன.

----


Next Story