புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு


புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு
x
தினத்தந்தி 21 March 2023 12:15 AM IST (Updated: 21 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வலிவலம் ஊராட்சியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு நடந்தது.. இந்த தேர்வினை 20 முதியோர்கள் எழுதினர். பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டது.இதில் கல்வி கற்காத முதியோர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அதன்படி கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட மையத்தில் முதியோர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது..இதில் 20 பேர் கலந்து கொண்டு தேர்வினை எழுதினர்.

1 More update

Next Story