கிராம மக்கள் சார்பில் தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம்


கிராம மக்கள் சார்பில் தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம்
x
தினத்தந்தி 6 Nov 2022 6:45 PM GMT (Updated: 6 Nov 2022 6:45 PM GMT)

கிராம மக்கள் சார்பில் தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது.

சிவகங்கை

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ள திருவாழ்ந்தூர் கிராமத்தில் கிளை அஞ்சலகம் போதிய கட்டிட வசதி இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக அஞ்சலகம் வேறு கிராமத்திற்கு மாற்றப்படும் நிலை வந்து விடும் என அப்பகுதி இளைஞர்கள் கருதினர். இதையடுத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய சொந்த செலவில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டிலான கட்டிடத்தை கட்டி அஞ்சலகத்திற்கு கொடுத்தனர்.


Next Story