அரசு தொடக்கப்பள்ளிக்கு விரைவில் புதிய கட்டிடம்


அரசு தொடக்கப்பள்ளிக்கு விரைவில் புதிய கட்டிடம்
x

எரவாஞ்சேரி அரசு தொடக்கப்பள்ளிக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என முகமது ஷாநவாஸ் உறுதி அளித்தார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி அரசு தெடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டது.இந்த நிலையில் தற்போது அருகிலுள்ள தனியார் இடத்தில் பள்ளி இயங்கி வருகிறது.அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., விரைவில் பள்ளிக் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.மேலும் அங்கு கழிவறை வசதி மற்றும் மாணவர்கள் விளையாடுவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்றார். இந்த ஆய்வின்போது திருமருகல் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், அபிநயா அருண்குமார், ஒன்றிய ஆணையர் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்


Related Tags :
Next Story